திலீபன்
மன்னனுக்கு குழந்தைப்பேறு இல்லை என்று, மந்திரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காட்டில் இருக்கும் தன்
குலகுருவான வசிட்டரை பார்க்கச் சென்றான். அவன் தேவலோகம் சென்ற போது கற்பக மரத்தின்
நிழலில் படுத்திருந்த காமதேனு பசுவை வணங்காமல் வந்ததால், அது
சாபம் இட்டதால், தனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை
வசிட்டர் மூலம் தெரிந்து கொண்டான்; எனவே அதற்குப் பரிகாரமாக
காமதேனுவின் கன்றான நந்தினியை வணங்கும்படி கேட்டுக் கொண்டார்.
காமதேனுவையும், அதன் கன்று நந்தினியையும் தேடுகிறான். ஆனால், அவைகள் அங்கு இல்லை; பாதாளத்தில் வருண பகவான்
நடத்தும் தீர்க்க சத்திர யாகத்தில் நின்கின்றனவாம். "நந்தினியை பக்தியோடு
வழிபட்டால் உனக்கு புத்திரப்பேறு
கிடைக்கும்" என்று வசிட்டர் வழி சொல்லியுள்ளார்.
வசிட்டர்
வேண்ட, அங்கு காமதேனு பசுவும் அதன் கன்றான நந்தினியும்
வந்தது.
"அரசனே!
நீ பரிசுத்தமானவானாய் ஆனாய். இலை, காய், கனி, முதலியவற்றை உண்டு
விரதம் பூண்டு இந்த நந்தினியை வழிபாடு செய். இந்த நந்தினி விடியற்காலையில் புல்
மேய்வதற்கு காட்டுக்குப் போகும். அங்கு நீயும் போ. அது நின்றால் நீயும் நில். அது
படுத்தால் நீயும் படு. அது நீர் குடித்தால் நீயும் குடி. உனது மனைவியும்
விடியற்காலையில் எழுந்து இந்த நந்தினியை வழிபட்டு அதை ஆசிரம எல்லைவரை கூட்டுக்
கொண்டு போய் விட்டு வரச் சொல். சாயங்காலத்தில் அது திரும்பி வரும்போது உன் மனைவி
அதை ஆசிரம எல்லையில் நின்று வழிபட்டு ஆசிரமத்துக்கு அழைத்து வர வேண்டும். இவ்வாறு
வழிபடுங்கள். நந்தினி அதில் மகிழ்ந்து உங்களுக்கு அருள் செய்யும். அப்படி செய்தால்,
உங்களுக்கு புத்திர உற்பத்தி உண்டாகும்" என வசிட்டர் கூறினார்.
அப்படியே
அரசனும் செய்து வந்தான்; அவன் மனைவியும்
செய்து வந்தாள்; 21 நாட்கள்
ஓடிவிட்டன. 22ம் நாள். அன்று அந்த நந்தினி, அரசனின் அன்பை
பரிசோதிக்க நினைக்கிறது. மலைச் சாரலை அடைகிறது. அங்கு இளம் புற்களை மேய்ந்து
கொண்டே ஒரு குகைக்குள் புகுகிறது. நந்தினியை விட்டுவிட்டு அவன் மலையின் சாரலை
ரசித்துக் கொண்டிருக்கும்போது அது குகைக்குள் புகுந்து விட்டது. யார் இந்த
நந்தினிக்கு தீங்கு செய்ய நினைப்பான் என மன்னன் அலட்சியமாக இருந்துவிட்டான்.
அந்த
நேரத்தில் அங்கு ஒரு சிங்கம் ஒன்று, திடீரென்று பாய்ந்து அந்த நந்தினியைப் பிடித்துக் கொண்டது. நந்தினி கீழே
விழுந்தது. அரசன் இதை பார்த்து, தன் வில்லை எடுத்து அம்பை
தொடுக்கிறான். ஆனால், அவன் தன் கைகளை இயக்க முடியவில்லை.
திகைத்து நிற்கிறான்.
இதை
சிங்கம் பொறுமையாகப் பார்க்கிறது. அரசனைப் பார்த்துச் சில வார்த்தைகளைச்
சொல்கிறது.
"அரசனே!
நீ எடுத்த முயற்சிகள் போதும். நீ அம்பை எய்திருந்தாலும் அது என்னை தொட்டிருக்காது.
வலிமை மிக்க தெய்வம் வந்து என்னுடன் போரிட்டாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
நான் சிங்கம் இல்லை. சிவனுக்கு சேவை செய்யும் கும்போதரன். நான் ஒரு பூதத்தலைவன்.
இங்கு நிற்கும் தேவதாரு மரத்தைப் பார். அதற்கு, உமாதேவியார் நீர் வார்த்து தம் பிள்ளையைப் போல் வளர்த்தார். இதனை காட்டு
யானைகள் வந்து சொறிந்து கொள்வதற்காக தேய்த்து, அதனால் அந்த
மரத்தின் தோல்கள் தேய்ந்து விட்டன. அந்த மரத்துக்கு காவலாக சிவன் என்னை இங்கு
அனுப்பி உள்ளார். இங்கு வெகுகாலம் காவல் இருக்கிறேன். ஒரு பிராணியும் வரவில்லை;
பசியாக இருக்கிறது. இன்று இந்த பசு வந்தது. எனவே அதை அடித்து உண்ண
நினைக்கிறேன். எனவே உன்னால் என்னை தடுக்க முடியாது. உன் குரு சொன்னபடி இதை
காப்பாற்றவும் முடியாது.
"தோல்வியடைந்த
நான் சொல்வது உனக்கு சிரிப்பாகவே இருக்கும். என்னை உணவாக எடுத்துக் கொள். உன்
பசியைப் போக்கிக் கொள். இந்த பசுவை விட்டுவிடு. மாலையில், என் தாய் வந்து எனக்கு பால் தரும் என நினைத்து
இருக்கும் இதன் கன்று என்ன பாவம் செய்தது. என் குருவுக்கும் இது பால் தரும். எனவே
இதை விட்டுவிடுவாயாக்.
தொடரும்......
No comments:
Post a Comment