சேக்கிழார்
நாயனார் புராணம்:
திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவேதியரரனை வழிபட்ட புராணமோ ரிரண்டுகுரைகழன்மா மாத்திர்ரொன் ற்றுவர்முடி மன்னர்குறுநிலமன் னவரைவர் வணிகர்குலத் தைவரிருமைநெறி வேளாளர் பதின்மூவ ரிடையரிருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர்பரதவர்சான் றார்வண்ணார் சிலைமறவர் நீசர்பாணரிவ ரோரொருவ ராம்பகருங் காலே.
திருமறை
என்னும் வைதீக மறையவர்களாகி அடியார் புராணம் பதிமூன்று;
சிவபிரானுக்கு தொண்டு செய்து முத்தி பெற்ற ஆதிசைவ
மறையவர் புராணம் இரண்டு;
சத்திக்காநின்ற வீரகண்டை அணிந்த
மாமாத்திரர் என்னும் மறையவர் குலத்து அடியவர் புராணம் ஒன்று;
அரச வமிசத்தர் ஆகிய அடியார் புராணம் ஆறு; குறுநில
மன்னர் அடியவர் புராணம் ஐந்து;
வணிகர் குலத்தினராகிய
அடியார்கள் புராணம் ஐந்து;
இம்மை மறுமைக்குரிய
நல்லொழுக்கத்தை உடைய வேளாள மரபின் அடியார்கள் புராணம் பதிமூன்று;
இடையர் குலத்தவராகிய அடியார்கள் புராணம் இரண்டு;
சாலியர்
குயவர் செக்கார் பரதவர் சான்றார், வண்ணார், வில்லையுடைய வேடர் நீசர் பாணர் இம்மரபினராகிய அடியார்கள் புராணம்
தனித்தனியே ஒவ்வொன்றும், என மரபறிந்தார் புராணம் ஐம்பத்தாறென
உணர்க.
No comments:
Post a Comment