Thursday, September 24, 2015

அசுவமேத யாகம்

குரு வசிட்டரின் அருளினால், அவர் ஆசிரமத்தில் இருந்த நந்தினி பசுவின் பாலை திலீபன் மன்னன் குடித்து அதனால் அவன் மனைவி கற்பவதியானாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதன் அழகில் மயங்கி, அந்த ஆண் குழந்தைக்கு ரகு என பெயரிட்டான். அவனும் வளர்ந்து வாலிபன் ஆனான்.

திலீபன் மன்னர் அசுவமேத யாகம் செய்தான். அதில் குதிரைக்கு பாதுகாப்பாக தன் மகன் இரகுவையே நியமித்தான். ஏற்கனவே 99 அசுவமேத யாகங்கள் நடந்து விட்டன. 100 வது யாகம் முடிந்தால் இந்திர பதவி கிடைக்கும். எனவே இந்த 100-வது அசுவமேத யாகம் நடத்தப்படுகிறது. அதில் அவிழ்த்து விட்ட குதிரையானது தன் இஷ்டமாக சுற்றித் திரிந்தது. அதை திலீபன் மன்னின் மகன் இளவரசன் இரகு காவல் காக்க பின்னே சென்றான். திடீரென்று இரகுவின் கண்கள் மங்கிவிட்டன. அந்த நேரத்தில் அந்த குதிரையை இந்திரன் கடத்திச் சென்று விட்டான். அந்த செய்தி தெரியாமல் இரகு தவிக்கிறான். அங்கு நந்தினி பசு வருகிறது. அந்த பசுவின் சிறுநீரில் கண்களைக் கழுவிக் கொண்டான் இரகு. அப்போது அவனின் கண்கள் கூர்மை அடைகின்றன. அவன் ஆகாயத்தில் பார்க்கிறான். அங்கு இந்திரன் இந்த குதிரையை கொண்டு சென்ற விபரம் தெரிகிறது.

உடனே இரகுவுக்கு கோபம் வருகிறது;
"இந்திரனே! எல்லா யாகத்திற்கும் சென்று நீ அவிபாகம் கொடுப்பாய்; அப்படி இருக்கும்போது, என் தந்தை திலீபன் மன்னனின் யாகத்தை கெடுக்கத் துணிந்தாய். நீயே நீதி தவறினால், வேறு யாரிடம் நீதியை எதிர்பார்ப்பது? உலகம் உன்னை இகழாதா? எனவே எங்களின் யாகக் குதிரையை எங்களிடம் கொடுத்துவிடு.
.... தொடரும்.....


No comments:

Post a Comment