விநாயகர் சரணம்
அணுவிற்கு அணுவாய்
அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற
கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும்
விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தொண்டர்
குழாத்துடன் கூட்டி
அஞ்சு கரத்தின்
அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின்
நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத்
தந்து எனை ஆண்ட
வித்தக விநாயகா!
விரை கழல் சரணே!
**
No comments:
Post a Comment