Thursday, May 26, 2016

விநாயகர் சரணம்

விநாயகர் சரணம்

அணுவிற்கு அணுவாய்
அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற
கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும்
விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தொண்டர்
குழாத்துடன் கூட்டி
அஞ்சு கரத்தின்
அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின்
நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத்
தந்து எனை ஆண்ட
வித்தக விநாயகா!
விரை கழல் சரணே!
**

No comments:

Post a Comment