Friday, May 27, 2016

சரணம் சரணம் சண்முகா சரணம்


 திருப்பரங்குன்றுறை திருமகன்

திருப்பரங்குன்று உறை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறை உறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே
ஒய்யார மயில் மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழனியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ
விராலி மலை உறை விமலா நமோ நமோ
மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூர சம்கார துரையே நமோ நமோ
வீரவேல் ஏந்தும் வேலனே நமோ நமோ
பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ
கண்களீர் ஆறுடை கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடைக் கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
ரரர ரரர ரீம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்
ணணண ணணண வாம் ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ கௌம் ஓம்
லல லிலி லுலு நாட்டிய அட்சரம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருக நிஷ் களங்களனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனதுடன் ஞான குரு உனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்திகேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை
தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார் திருவேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலை முதல்
தன்னிகரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதியாய் வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்கு அன்புடன் தமிழைச்
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நிறை மெய்ப்பொருளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி
வாணி உடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முகமாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரணிகிருபை புரிபவா போற்றி
பூதலத்துள்ள புண்ணிய தீர்த்தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர் புவிகிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிஷ்டைகள் பலபல எல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய் போல் எழிலுடை உன்னை
அல்லும் பகலும் ஆசாரத்துடன்
சல்லாபமாய் உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
பல்லாயிர நூல் பகர்ந்தருள் வாயே
செந்தில்நகர் உறை தெய்வயானை வள்ளி
சந்தகம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவ ஓம்
அரன்மகிழ் புதல்வா அறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்
 **


No comments:

Post a Comment