Tuesday, January 5, 2016

கிராதார்ச்சுனீயம்-1

கிராதார்ச்சுனீயம்-1
12 ஆண்டுகள் வனவாசமும், ஓராண்டு அக்ஞாத வாசமும் செய்வதற்காக நாட்டைவிட்டு காடு புகுந்த பாண்டவர்கள் ஐவரும் கானகத்தில் அலைந்து திரிகையில், துவைத வனம் என்ற நன்மணம் கமழும் தண்பொழில்கள் சூழ்ந்த ஓர் ரம்மியமான வனத்தில் சிலநாட்கள் வசித்தனர்;
தருமநெறி தவறாத தர்மர், ஓர்நாள் இவ்வாறு யோசனை செய்கிறார்;
"என்னே! எம் வனவாசத்தின் பெரும் பகுதியும் இறைவன் திருவருளால் இடர் இன்றி கழிந்தது; இன்னும் சில தினங்களே உள்ளன; நாடு நீங்கி, பல ஆண்டுகள் ஆகிவிட்டன; நாடு என்னுடையது என்று தருக்கி கோலோச்சுகிறான் சுயோதன்; மக்களுக்கு, மன்னனிடம் எவ்வளவு அன்பு உருவாகி இருக்கிறதோ தெரியவில்லையே; அந்த அன்பில், மக்கள் ஒருவேளை என்னை மறந்திருக்கலாம்; யாருக்குத் தெரியும்; எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே; இனி என்ன செய்வது?" என நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தான்;
இதை தெளிவாகத் தெரிந்துகொள்ள ஓர் ஒற்றனை சுயோதனன் நாட்டிற்கு அனுப்புவதே நல்லது என துணிந்தான்; தன்னுடன் காட்டிலேயே வசித்து வருபவனான தனது நண்பனுமான வேடுவன் ஒருவனை அழைத்து தன் உள்ளத்தில் எழுந்ததை அவனுக்கு கூறினான்; அவனும் அதற்கு சம்மதித்தான்;
அவனைப் பார்த்து தர்மன் சொல்கிறான்-
"நண்ப! நீ இந்த வேடத்தோடு போகக்கூடாது; அவ்வாறு சென்றால், பலரும் உன்னைப் பார்த்து ஏளனம் செய்வார்கள்; நீ, எங்கும் புக முடியாத இடத்திலெல்லாம் புகுந்து போக வேண்டும்; அங்கு நடக்கும் பல அறிய விஷயங்களை எல்லாம் அறிய வேண்டும்; அவற்றை எனக்கு கூற வேண்டி உள்ளது;  நான்கு நிலைகள் உள்ளன; அதில் பிரமசாரிய நிலை வேடமே சிறந்தது" என்று கூறினான்.

அதைக் கேட்ட வேடுவன், 
"முறுக்கிய சடை முடியனும், நீறு பூத்த நெற்றியனும், அண்ணலாரக்கமாலை (ருத்ராட்ச கொட்டை) சூடிய கண்டனும், தண்டந் தாங்கிய கையனுமான துரியோதனன் நாட்டை அடைந்து, அங்கு சில பகல் இரவுகள் தங்கி, அவனது அரசியலை செவ்வனம் அறிந்து மீண்டும் துவைத வனம் வந்துவிடுவேன்" என்று சொல்லிச் சென்றான்.
)( 

No comments:

Post a Comment