அகத்தியர் பொதிகை மலைக்கு வருவதற்கு முன்பே, தமிழ்மொழி இங்கு வழங்கிவந்த மொழிதான் என்று கூறுகின்றனர்;
தமிழ்மொழிக்கு உரிய எழுத்துக்கள் 'முதல் எழுத்துக்கள்' என்றும், 'சார்பு எழுத்தக்கள்' என்றும் இரண்டு வகைப்படும்; அவற்றுள், உயிர் எழுத்துக்கள் 12; மெய் எழுத்துக்கள் 18;
வடமொழியில், முதல் எழுத்துக்கள் 51; அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 16;
வடமொழியிலிருந்துதான் தமிழ் வந்தது என்பது உண்மையானால், தமிழிலே உள்ள எழுத்துக்களாலே வடமொழிப் பதங்களை திரிபின்றி அமைத்து கொண்டிருக்கமுடியும்; ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை;
தெலுங்கு மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள், வடமொழி பதங்களை எடுத்து ஆண்டு கொண்டுள்ளனர்; ஆனால் தமிழுக்கு இலக்கணம் செய்தவர்கள் அவ்வாறு வடமொழியை தமிழில் எடுத்துக் கொள்ளவில்லை;
தொல்காப்பியத்திலே வடமொழிப் பதம் ஒன்றுகூட வரவில்லை; அவை எல்லாம் செந்தமிழ் சொற்கள்; எனவே வடமொழியிலிருந்து தமிழ் வந்தது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனலாம்;
No comments:
Post a Comment