Saturday, January 16, 2016

El Nino எல்நினோ

Diary 1
El Nino எல்நினோ
வெப்ப பகுதி என்று சொல்லலாம்;
En Nino Southern Oscillation (in short ENSO);

2015 டிசம்பரில் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரத்தில் சென்னையில் கடலூரில் கொட்டித் தீர்த்த மழை; மழை என்று சொல்வது சாதாரணமான வார்த்தையாக தெரிகிறது; கடுமையான வார்த்தை ஏதாவது இருக்கிறதா? வெள்ளக்காடு என்று சொல்லலாம்;

பைபிளில் சொல்லப்பட்டுள்ளது; 
இதே போன்ற ஒரு வெள்ளம் வந்ததாம்; கடவுள் நோவாவிடம் இதை சொல்லி உஷார் படுத்தி இருக்கிறார்: அவரும், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும், ஆடு மாடு பறவை மிருங்களையும் காப்பாற்ற, ஒரு பெரிய கப்பல் செய்து அதில் இவை அனைத்தையும் ஏற்றிக் கொண்டு மிதந்து திரிந்து, வெகுநாள் கழித்து வெள்ளம் கொஞ்சம் குறைந்தவுடன், ஒரு மலையை அடைந்து உயிர் பிழைத்திருக்கிறாராம்;

அப்படி ஒரு வெள்ளம் சென்னையில்.... அதை அனுபவித்தவர்கள் சொல்லும்போது, பைபிளின் நோவாவின் வெள்ளப் பெருக்கையே நினைவூட்டுகிறது;

ஏன் இந்த வெள்ளம்? கடலின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கிறதாம்; பசிபிக் கடலில் இது அதிகமாக இருக்கிறதாம்; 1998லிருந்தே இது இருக்கிறதாம்; இதன் பாதிப்பால், கம்போடியா, தென்-இந்தியா, கிழக்கு இந்தனோஷியா, மத்திய பிலிப்பைன்ஸ், தெற்கு பிலிப்பைன்ஸ், வட தாய்லாந்து பகுதிகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்குமாம்; இதனால் கனமழை அதிகமாக இருக்குமாம்;

சென்னையில் 2015 நவம்பர்-டிசம்பரில் இதுவரை இல்லாத மழை அளவு பெய்தது; அதன் அளவு: 21 அங்குலம் என்கிறார்கள்; 12 அங்குலம் என்றால் ஒரு அடி; கிட்டத்தட்ட இரண்டு அடி உயரக் கணக்கில் மழை; இதுவரை இப்படி ஒரு அளவில் பெய்ததில்லை; புண்ணியவான்கள் அதிகமாக இருந்ததால் சென்னை இந்த அளவு பாதிப்புடன் மறுபடியும் உயிர் பெற்றது;

இனி நாம் உஷாராகவே இருக்க வேண்டும்; எல் நினோ வெப்பம் ஏன் கடலில் வருகிறது; அதுவும் தென் இந்தியா பகுதியில் ஏன் அதிகம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்;

அடுத்த எல்-நினோ வெப்ப மண்டலம் எப்படி உருவாகும் என்று தெரியவில்லை; தெரிந்தால், இந்த வெள்ளத்தை எதிர்பார்த்து உஷாராகலாம்;

ஆனால் இப்படியொரு வெள்ளம் வந்தால், இனி சென்னை எப்படி முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பழகிக் கொள்ளவும் வேண்டும்; வீடுகளில் “நோவாவின் படகும்” வைத்துக் கொள்ளவேண்டும்!

இந்த சென்னைப் பெருவெள்ளம் “எல்-நினோவால்” வந்ததே என வானியில் வல்லுனர்கள் கருதுகிறார்கள்; சாதாரண பருவ மழை என்று அசட்டையாக இருக்கக் கூடாது;




No comments:

Post a Comment