வஞ்சிர காயம்
அண்ணா! தேகம் நிலையானதல்ல என்றால், சில யோகிகள், தபசிகள், தங்கள் காயத்தை (உடலை) வச்சிர காயமாக்குவதின் பிரயோசனம் யாது? நிலையில்லாத தேகத்தை எவ்விதம் வச்சிர காயமாக்கலாம்?
தம்பீ! இறக்கும் இயல்புள்ள தேவர்களுக்கு அமரர் என்னும் பெயர் உபசாரமாக வழங்கப்படுவது போல, நிலையில்லாத தேகத்துக்கும் சாமானிய மனிதரின் தேகத்தைப் போல இல்லாமல், நோயின்றி கூடிய காலத்துக்கு உயிருடன் இருப்பதால், உபசாரமாக வச்சிரகாயம் என்னும் பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறது: அதை விட்டு, வச்சிக்காயம் என்றென்றைக்கும இறவாது இருக்குமென்று எண்ணுவது தவறு; இவ்வித விளக்க பேதத்தினால் அனேகர் மோசம் போகின்றனர்.
(அ=இல்லை, இன்மை என்று பொருள்;
மரர் என்றால் மரிப்பவர், இறப்பவர்;
எனவே அமரர் என்பது மரியாதவர், இறவாதவர் எனலாம்)
தேகம் நிலையானதல்ல; ஆனால் தேகி (அந்த தேகத்தில் வசிப்பவன்) என்னென்றைக்கும் நிலையானவன்; அன்றியும் தேகிக்காத் தேகம் உண்டானதே அன்றி, தேகத்துக்காக தேகி உண்டாவில்லை; என்றாலும் தேகத்தைக் கவனியாது விட்டுவிடும்படி சொல்லவில்லை; அதற்குப் போதுமான, ஊண், உடை, நித்திரை முதலியவற்றைக் கொடுப்பதே தவிர, மிதமிஞ்சிக் கொடுப்பது அநாவசியம்; தேகியை விட்டுத் தேகத்தையே பொருளாக மதித்து, அதற்காக இரவும் பகலும் காலத்தைச் செலவிடுவது விவேகிகளின் இலட்சணமல்ல!
________
No comments:
Post a Comment