ஆதிசேஷன்
கசியப பிரசாபதிக்கும் கந்துருவைக்கும் பிறந்தவர்களில் மூத்தவன்; இவனின் தாய் கந்துருவை, தன் சக்களத்திக்கு செய்த கொடுமைகளைக் காணச் சகிக்காமல், திவ்விய தேசங்களான திருக்கோகர்ணம், கந்தமாதனம் ஆகிய இடங்களுக்குச் சென்று அங்கு கடும் தவம் புரிகிறான்: அதைக் கண்ட பிரம்மா, இவனுக்கு, இந்த பூமியின் பாரத்தை தாங்கும் பலத்தை அவனுக்கு வழங்கினார்:
பின்னர், அவனின் கடும் தவத்தால், விஷ்ணுவுக்கு ஆயிரம் தலை உடைய சர்ப்ப சயனமாகவும், எல்லா சர்பங்களுக்கும் ராஜாவாவும் இருக்கும்படி அருளினார்;
இந்த ஆதிசேஷனை ஒருமுறை பிருகு முனிவர் சபித்து விட்டார்: அதனால், ஆதிசேஷன், பலராமனாக அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம்;
No comments:
Post a Comment