சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(சிவபுராணம்)
சிவன் அவன் என் சிந்தை உள் நின்ற அதனால்
(சிவ மூர்த்தியாகிய அவன் என் சிந்தையின் உள்ளே நின்கிறான்; அதனால்)
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
(அவனின் அருளால், அவனின் திருவடிகளை (பாதங்களை) வணங்கி)
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
(என் உள்ளம் மகிழ, சிவபுராணத்தை)
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்!
(என் முந்தைய வினை முழுவதும் ஓய்ந்து போகும்படி சொல்லுவேன் நான்!)
No comments:
Post a Comment