ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(சிவபுராணம்)
ஈசனடி போற்றி! எந்தை அடி போற்றி!
(ஈசனான என் தலைவன் அடி போற்றி! எனது தந்தையின் திருவடி போற்றி!)
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
(ஒளியுடைய தேசன் அடி போற்றி! சிவனின் சிவந்த திருவடி போற்றி!)
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
எங்களின் நேசத்துக்கு உரியவனாக நின்ற் மாசற்றவன் திருவடி போற்றி!)
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
(இந்த மாயமான பிறப்புகளை அறுக்கும் எங்கள் மன்னனான உன் திருவடி போற்றி!)
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் வாழும் நம் தேவன் அடி போற்றி!)
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!
(தீராத இன்பம் அருளும் மலை போன்ற எம் இறைவனே உன்னை துதிக்கிறேன்!)
**
No comments:
Post a Comment