மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(சிவபுராணம்)
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
(உண்மையாகவே உன் பொன்னான திருவடிகளைக் கண்டு இன்று வீடுபேற்றை அடைந்தேன்)
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
(நான் பிறவித் துன்பத்திலிருந்து விடுபடும் பொருட்டு, என் உள்ளத்தின் உள்ளே
ஓம் என்ற ஓங்காரமாய் நின்ற)
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
(மெய் என்னும் உண்மைப் பொருளே! விமலா (மாசற்றவனே); விடை என்னும் எருதின் மீது
வந்தவனே! வேதங்களின்)
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!
(வேதங்களின் ஐயா என ஓங்கி, ஆழ்ந்து, அகன்று நுண்ணிய பொருளாய் நின்றவனே!)
**
No comments:
Post a Comment