Saturday, November 21, 2015

உசுப்பேற்றும் வேலை

பிகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது; பழைய முதல்வர் நிதீஷ்குமார் அவர்களே மீண்டும் முதல்வராகி விட்டார்; கூட்டு மந்திரிசபை ஏற்பட்டுள்ளது; கூடவே லாலு பிரசாத் யாதவும் சேர்ந்துள்ளார்; யாதவின் மகன்களுக்கும் மந்திரி பதவி கிடைத்துள்ளது; ஒரு மகனுக்கு துணை முதல்வர் பதவி;

பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து கிடைத்த வெற்றி என்று பிகார் மக்கள் நினைக்கிறார்கள்; பா.ஜ. கட்சியை பிடிக்காதவர்கள் இப்போது முதல்வர் நிதீஷ்குமாருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்; இன்னும் ஒரு படி மேலே போய், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று உசுப்பேற்றுகிறார்கள்; பரூக் அப்துல்லா இந்த வேலையை செய்திருக்கிறார்; தன்னுடைய இயலாமையை மற்றவர்கள் மூலம் தீர்த்துக் கொள்வார்கள் போல!

இந்த உசுப்பேற்றும் வேலைக்கு முதல்வர் நிதீஷ்குமார் இடம் கொடுத்து விடக்கூடாது.
                           )(


No comments:

Post a Comment