திருவிளையாடல்-1
மதுரையில் சிவன்
செய்த விளையாட்டுக்கள் திருவிளையாடல் எனப்படும்.
1-வது திருவிளையாடல்:
இந்திரனைக்
கொல்லும்படி விருத்திராசுரன் என்பவனை ஏவி விடுகிறார் துவஷ்டா. இந்த துவஷ்டாவின்
மகனைக் கொன்றவனை பழிவாங்கும் பொருட்டு யாகம் நடத்தி, இதில்
இந்த விருத்திகாசுரனை உருவாக்கி இந்திரனைக் கொல்லுமாறு அனுப்புகிறார். ஆனால்,
அந்த விருத்திகாசுரனை இந்திரன் கொன்று விடுகிறார். இதனால்
இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. (தேவர்கள் யாரையாவது கொலை செய்தால்
இந்த பாவம் வந்துவிடும்; இதற்கு பரிகாரம் செய்து கொள்ள
வேண்டுமாம்). எனவே இந்திரனுக்கு இந்தப் பாவம் வந்ததால் அவன் ஒளி இழந்து தெளிவின்றி
இருக்கிறாராம். எனவே அவ்வாறு தெளிவில்லாமல் அலைந்து திரிந்தபோது, வழிதவறி கடம்பவனம் என்னும் பகுதியை அடைகிறாராம். (கடம்பவன்தான் பழைய
மதுரை). அங்கு சிவனை கண்டு அவரிடம் தனக்கு அருள் புரியுமாறு வேண்டுகிறார்.
சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பூக்களைத் தேடுகிறார் இந்திரன். பூக்களை எங்கும்
பார்க்க முடியவில்லை. அங்குள்ள ஒரு குளத்தில் மட்டும் பொன்னால் ஆக தாமரை மலர்கள்
(பொற்றாமரை) பூத்திருக்கின்றன. அந்த பொற்றாமரை மலர்களை சிவனே தோற்றுவித்து முதல்
திருவிளையாடலை நடத்தி இருக்கிறாராம்.
இந்திரனுக்கும்
விருத்திராசுரனுக்கும் சண்டை. இருவரும் மற்போர் புரிகிறார்கள். இந்திரன் தோற்று
விட்டார். தப்பித்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சம்
புகுந்து விட்டார். அவரிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகிறார். அவர் கடலில் தவம்
செய்யும் ஒரு முனிவரை போய் வேண்டி உன் உடம்பையும் உயிரையும் காப்பாற்றிக் கொள்
என்று கூறுகிறாராம். அந்த முனிவரை இந்திரன் சந்திக்கிறார் தன்னைக் காப்பாற்றும்படி
கேட்கிறார்.
முனிவரோ--
"இந்த உடம்பைக்
காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய்; எதற்காக இப்படி பயந்து சாகிறாய்; இந்த உடம்பில் உயிர் பிரிந்துபின்னர், அந்த உடல் வீட்டில் கிடந்தால் உன்னைப் பெற்றவர்கள் இது தனக்குத்தான் சொந்தம்
என்பர்; காட்டில் கிடந்தால், நாய்,
நரிகள் தங்களுக்குச் சொந்தம் என சொந்தம் கொண்டாடும்; பிணியால் கிடந்தால் யமனும், பேயும் தங்களுக்குச்
சொந்தம் என கொண்டாடுவர்; இப்படிப்பட்ட உடம்பை நீ உனக்குச்
சொந்தம் என்று கொண்டாடி அதைக் காப்பாற்ற வருகிறாயே? உண்மையில்
இந்த உடம்பு யாருக்குச் சொந்தம்? சொல் பார்க்கலாம் என்று
கேள்வியை எழுப்புகிறார். உண்மையில் இந்த உடம்பானது, துன்பப்படுபவர்களுக்கு
உதவுவதற்காக இறைவன் படைத்திருக்கிறான். எனவே என் உடம்பு எதற்கும் பிரயோசனப்படாது;
எனவே என் உடம்பை எடுத்துக் கொள்; அதிலுள்ள
எலும்புகளைக் கொண்டு சண்டையிட்டு உன் எதிரி விருத்திராசுரனைக் கொல் என்று
அறிவுறுத்துகிறார். அவ்வாறே இந்திரனும் அந்த முனிவரின் உடம்பில் உள்ள எலும்புகளை
வைத்து, எதிரியை கொன்று அழிக்கிறான். அதனால் அவனுக்கு
பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் தேடிய போதுதான் சிவன் பொற்றாமரை
மலர்களை ஏற்படுத்தி அதைக் கொண்டு இந்திரன் சிவனை அர்ச்சனை செய்து அவனின்
பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்கிறாராம்.
**
No comments:
Post a Comment