Wednesday, October 14, 2015

விந்திய மலை

அகத்தியர் பாரதத்தின் தென்திசை பகுதிக்கு வருகிறார். அப்படி அவர் வரும்போது --
கங்கையிடம் சென்று, தனக்கு காவிரியைக் கொடுக்கும்படி கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்; 
ஜமதக்கினி முனிவரிடம் சென்று அவரின் மகன் திரணதூமாக்கினியை தனக்கு சிஷ்யனாகத் தரும்படி கேட்டு வாங்கிக் கொள்கிறாராம்; 
புலத்தியனிடம் சென்று அவரின் தங்கையாகிய லோபமுத்திரையை தனக்கு மனைவியாகக் கொடுக்கும்படி கேட்டு அவரை தன் மனைவியாக ஆக்கிக் கொள்கிறாராம்; 
இவைகளைப் பெற்றுக் கொண்டு விந்திய மலைக்கு வருகிறார். அந்த மலை இவருக்கு வழிவிட மறுக்கிறதாம்; 
உடனே, அதை தன் காலால் அழுத்தி தரை மட்டமாக்கி விட்டாராம்; 
பாரதத்தின் மத்திய பகுதியில் இருப்பது இந்த விந்திய மலைத் தொடர்; 


No comments:

Post a Comment