Thursday, October 15, 2015

சிரார்த்தம்

சிரார்த்தம்:
சிரார்த்தம் என்பது பிதிர் கன்மம் அல்லது பிதிர் கார்யம்.
பிதுர்தேவதைகளுடைய திருப்திக்காக செய்யப்படும் பிண்ட கருமம். 
இது சுபமாகச் செய்யும் சுபகாரியமாகவும், அசுப-கர்மமாகவும் செய்யப்படும். 
சுப-கர்மத்தில் செய்யும் சிரார்த்தம் 'நாந்தி' 'அப்பியுதம்' என்று இரண்டு வகை உண்டாம்
அசுப-கருமத்தில் செய்யப்படும் சிரார்த்தம் 'நேகம்' என்றும் பெயர்.
அவற்றுள், பிரேத சிரார்த்தம் என்பது பிரேத திருப்தியின் பொருட்டு செய்யப்படுவது.
பைதிருக சிரார்த்தம் பிதிர்தேவதைகளின் பொருட்டு செய்யப்படும். 
காசி, கயை, பிரயாகை, குருக்ஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புஷ்கலக்ஷேத்திரம், முதலியன சிரார்த்த கார்யங்களுக்கு சிறந்த புண்ணிய இடங்களாம். இவற்றில் கயாவில் செய்வது மிகுந்த பலனளிக்குமாம். 
இறந்த தினம், அமாவாசை, மகாளயபக்ஷ முதலிய நாட்கள் இந்த சிரார்த்தத்துக்கு உரிய காலங்களாம்.
**


No comments:

Post a Comment