திருவிளையாடல்--7
சிவபெருமான் மதுரையில் செய்த விளையாட்டுக்களே
திருவிளையாடல் எனப்படும்.
(திருமணத்துக்கு வந்த குண்டோதரன் அங்கு சமைத்த மொத்த உணவையும்
சாப்பிட்டு காலிசெய்ய வைத்த திருவிளையாடல்);
சிவபெருமான் கைலாசத்திலிருந்து மதுரைக்கு ராணி
தாடகைப் பிராட்டியை திருமணம் செய்து கொள்ள வருகிறார். இங்கு அவர் பெயர் சோமசுந்தர
பாண்டியன். இவர்தான் மணமகன்; மதுரையின் ராணியான தாடகைப் பிராட்டிதான் மணமகள்;
மதுரையில் நடக்கும் திருமணத்துக்கு எல்லா நாட்டு மன்னர்களும்
வந்திருக்கிறார்கள்; கைலாசத்திலிருக்கும் தேவர்களும்
வந்திருக்கிறார்கள்;
பாண்டிய நாட்டின் வழக்கப்படி, மணமகள் வீட்டார்தான்,
திருமணச் செலவையும், விருந்து செலவையும் ஏற்றுக்
கொள்ள வேண்டும். அதன்படி, ராணி தாடகைப்பிராட்டியே தன்
திருமணத்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். பெரிய
விருந்துக்கும் ஏற்பாடும் செய்து விட்டார்; இருவருக்கும்
திருமணம் முடிந்து விட்டது; திருமணத்துக்கு வந்த கூட்டம் மிக
அதிகமாக இருக்கிறது; கணவரிடம், பெருமையுடன்
சொல்கிறார், "வந்தவர்கள் எல்லோருக்கும் தேவையான உணவுகளை
ஏற்பாடு செய்துவிட்டேன்; எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருந்து
உணவு அருந்திவிட்டுப் போக சொல்லுங்கள்" என்று கூறுகிறார்; சிவன்
சிரித்துக் கொள்கிறார்;
திருமணத்துக்கு வந்திருந்தவர்களில், சிவகணங்களைச் சேர்ந்த
"குண்டோதரனும்" ஒருவன்; அவனுக்கு எவ்வளவு உணவு
படைத்தாலும் போதாது. ஒரு நொடியில் மலைபோல உணவுகளை உண்பவன்; சிவன்,
முதலில் அவனைச் சாப்பிட அனுப்பிவிட்டார்; திருமணத்துக்கு
சமைத்திருந்த மொத்த உணவையுமே அவன் ஒருவனே சாப்பிட்டு முடித்து விட்டான்; வேறு யாருக்கும் சாப்பாடு இல்லையாம்; இன்னும் எனக்கு
உணவு வேண்டும் என்று சமையல் கட்டில் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறான்; இந்த தகவல் ராணி தாடகைப்பிராட்டிக்கு போகிறது; அவர்
வந்து பார்க்கிறார்; உணவு இல்லை; ஆகா, இவ்வளவு சமைத்தும், நம் கணவர் வீட்டு ஆட்களுக்கு திருமண உணவு அளிக்க முடியாமல்
போய்விட்டதே என்று ஆச்சரியம் கலந்த கவலை; சிவன் வருகிறார்;
சிரிக்கிறார்; எல்லோருக்கும் உணவு இருக்கிறது
என்று சொன்னாயே என்று கேட்கிறார்; ராணி, நாணி நிற்கிறார்;
இவ்வாறு வேண்டுமென்றே மணமகளைச் சிக்கலில்
மாட்டிவிட்டு நடத்திய திருவிளையாடலே ஏழாம் திருவிளையாடல்;
**
No comments:
Post a Comment