Saturday, October 10, 2015

பாசுபதம்

வெற்றி அடைவதற்குறிய உபாயங்கள்;
இதை வேதவியாசர், தருமனுக்குச் சொல்கிறார்;

"செஞ்சொற் தருமனே! முழுமுதற் கடவுளாம் பசுபதியை நோக்கி பார்த்தன் பெரும்தவம் புரிந்து, பாசுபதம் என்னும் ஓர் திவ்விய அஸ்திரம் பெற்று வர வேண்டும். அதைக் கொண்டு இத் தானைத் தலைவர்களின் தலைகளைப் போர்முனையில் பனங்காயென உருட்ட வேண்டும். அதற்கானதோர் அரிய பெரிய மந்திரத்தை அருச்சுனன் பெறுவதற்கு இதுவே தக்க தருணம். 
ஐயனே! வேதம் ஓதுதல், உண்டி சுருக்குதல், மஞ்சனமாடுதல் முதலிய விரதங்களைக் கைக்கொண்டு, மனம் அடக்கி, மந்திரம் ஓதி, உமாபதியைத் தியானஞ் செய்து, விரதம் பங்கமுறா வண்ணம் வில்லும், வாளும் ஏந்திச் செல்க. இதோ இவ் வியக்கனுடன் புண்ணிய கிரியாம் இந்திரகீலம் அடைந்து, கடவுளர்க்கு அரசனான வாசவனை (இந்திரனை) முதற்கண் வழிபட்டு அவன் அருளையும் பெறுக.

இந்த உபதேசத்தைப் பெற்றவுடனேயே அவன் வேற்று மனிதனாக மாறிவிட்டான். 

No comments:

Post a Comment