Saturday, October 17, 2015

திருவிளையாடல்-4

திருவிளையாடல்-4
மதுரை நகரில் சிவபெருமான் செய்த விளையாடல்களே திருவிளையாடல்.
(உமாதேவியை மகளாகப் பெற்ற கதை)
குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்ட காலம். அந்த மன்னனுக்கு ஒரு மகன். அவன் பெயர் மலயத்துவச பாண்டியன். அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது, அவன் மனைவி பெயர் காஞ்சனமாலை. அவளைத் திருமணம் செய்து வருடங்கள் ஆனபோதிலும் புத்திரர் ஏதும் பிறக்கவில்லையாம். எனவே குழந்தை வேண்டி, ஒரு யாகம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அவ்வாறு பெரிய யாகம் செய்கிறார்கள். அந்த யாகத்திலிருந்து ஒரு மூன்று வயது சிறுமி தோன்றி வருகிறாள். அவள்தான் உமாதேவி. இவளுக்கு "தடாதகைப்பிராட்டி" என்று பெயர் சூட்டுகிறார்கள்.
உமாதேவியையே மகளாகப் பெற்றவர் பாண்டிய மன்னன்.
இதற்குமுன் உள்ள பிறவியில், காஞ்சனமாலை, தன் தவ வலிமையால் உமா தேவியை மகளாக அடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். அதனால்தான் இந்தப் பிறவியில், காஞ்சனமாலைக்கு மகளாக உமாதேவியாரே பிறந்திருக்கிறாராம். இந்த காஞ்சனமாலை என்னும் பெண் முற்பிறப்பில் விச்சாவதி என்ற பெயர் கொண்ட கந்தருவப் பெண்ணாம்.

**

No comments:

Post a Comment