Saturday, December 12, 2015

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-4

அம்மையின் அழகிய பெயர்கள் ஆயிரம்-4

திரு இரும்பூளை:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: காசியாரணியேஸ்வரர்;
அம்மை: ஏலவார்குழலி;

திரு இரும்பை மாகாளம்:
தொண்டை நாட்டில் திரு அரசிலிக்கு தென்கீழ்திசையில் உள்ள சிவஸ்தலம்;
மாகாளர் பூஜித்த தலம்;
சுவாமி: மாகாளேஸ்வரர்;
அம்மை: குயின்மொழி;

திரு இலம்பையங்கோட்டூர்:
காஞ்சீபுரத்துக்கு வட கீழ் திசையில்  உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: சந்திரகேகரேஸ்வரர்;
அம்மை: கோடேந்து முலையம்மை;

திரு ஈய்ங்கோய்மலை:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: மரகதாசலேஸ்வரர்;
அம்மை: மரகதவல்லி;

திரு எருக்கத்தம் புலியூர்:
நடுநாட்டில் மணிமுத்தா நதி தீரத்தில் உள்ள  சிவஸ்தலம்;
இதை நாகேந்திர பட்டிணம் என்பர்;
சுவாமி: நீலகண்டநாயகர்;
அம்மை; நீலமலர்க்கண்ணி;

திரு எறும்பியூர்:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
எறும்பு வணங்கி அருள் பெற்ற தலம்;
சுவாமி: ஏறும்பீசர்;
அம்மை: நறுங்குழல்நாயகி;

திரு ஏகம்பம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: ஏகாம்பரநாதர்;
அம்மை: காமாட்சி;
(சிறப்பு: உமாதேவி இங்கு சிவனை மண்ணினால் உருவாக்கி வணங்கி வரும்போது, அதை சோதிப்பதற்காக, பெருவெள்ளம் வரவழைத்தார்: உமாதேவி, மண்லிங்கத்தை காப்பதற்காக, அதை தன் மார்போடு அணைத்துக் கொள்கிறார்; மார்பின் தழும்பு இந்த லிங்கத்தில் இருக்கிறதாம்; இங்கு ஒரு மாமரம் இருக்கிறதாம்; அது வேதங்களின் வடிவமாம்;)

திரு ஒமாம் புலியூர்:
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: துயர்தீர்த்த செல்வர்;
அம்மை: பூங்கொடியம்பிகை;
(சிறப்பு; வேடன் புலிக்கு பயந்து, அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறி இரவு முழுவதும் கிளையிலேயே இருந்து, வில்வ இலைகளை பறித்து போட்டிருக்கிறான்; அது சிவனுக்கு அபிஷேகமாகி, அருள் பெறுகிறான்;)

திருக்கஞ்சனூர்;
காவிரியின் வடகரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: அக்கினீஸ்வரர்;
அம்மை: கற்பநாயகி;
(சிறப்பு: மணக்கோலத்தில் இருந்த கன்னியிடம், சிவன் மாறுவேடத்தில் வந்து, அவளின் கூந்தலைக் கேட்க, அவளின் தகப்பன் மறுக்காமல் அதை அறுத்துக் கொடுக்கிறான்; இங்குதான், பழுக்க காய்ச்சிய இரும்புப் படிக்கட்டில் ஏறி சென்று, ஹரதத்தாசாரி சிவபரம் சென்றாராம்;)

திருக்கடம்பந்துறை:
காவிரியின் தென்கரையில் உள்ள சிவஸ்தலம்;
சுவாமி: கடம்பவனநாதர்;
அம்மை: முற்றிலா முலையம்மை;

No comments:

Post a Comment