சௌபரி ரிஷி;
ஞானம் வேண்டி தவம் இருப்பர்; ஆனால் சௌபரி ரிஷி ஒரு வித்தியாசமான பேர்வழி; தனக்கு ஒரு அழகான மனைவி வேண்டும் என்று தவம் இருக்கிறார்; அதுவும் மாந்தாதா என்பவரின் மகளில் ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும் என வேண்டி தவம் இருக்கிறார்; யமுனை ஆற்றங்கரையில் தவத்தில் உட்கார்ந்தவர் பன்னிரண்டு வருடங்கள் போனது தெரியாமல் உட்கார்ந்து விட்டார்; மாந்தாதாவுக்கு இந்த விபரம் தெரிந்து அந்த ரிஷியை வரச் சொல்கிறார்; தனது மகளை அந்த ரிஷிக்கு திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி சொல்கிறார்: தனது மாளிகையின் கன்னி மாடத்துக்கு போய், அங்குள்ள தன் மகள்களில் யார் உங்களுக்கு பிடிக்கிறதோ அவரை கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள்; அவளையே உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்கிறார்;
சௌபரி ரிஷி மாடியில் உள்ள கன்னி மாடத்துக்கு போகிறார்; ரிஷியாகப் போகாமல், மன்மதனைப் போல தன்னை அலங்காரம் செய்து கொண்டு போகிறார்: அங்கு மிக அதிகமாக கன்னிகள் இருக்கின்றனர்; எல்லோருமே மாந்தாதாவின் மகள்தான்; எல்லோருமே அழகிகள்; ரிஷிக்கு ஆசை அதிகமாகிவிட்டது; இவர் மன்மதனைப் போல இருந்ததால் அங்கிருந்த எல்லா கன்னிகளும் இவரை விரும்பினர்; எனவே அவர்களை எல்லோரையும் கீழே அழைத்துக் கொண்டு வந்து இவர்களை அனைவரையும் திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்கிறார்; அப்படியே மாமனாரும் செய்கிறார்; அவர்களுடன் இந்த ரிஷி நெடுங்காலம் வாழ்கிறாராம்; 12 வருடம் தவம் வேலை செய்திருக்கிறது போலும்!.
No comments:
Post a Comment