Saturday, December 12, 2015

அப்பைய தீட்சிதரின் கர்மவினை

அப்பைய தீட்சிதரும், தாதாசாரியாரும்;

இரண்டு பேருக்குமே தொழில்போட்டி; இருவரும் வாதம் செய்வதில் நிபுணர்கள் (வக்கீல்கள் மாதிரிபோல); எப்போது தொழிலில் போட்டிவரும் என்றால், ஒரு நல்லவரும் ஒரு கெட்டவரும் இருக்கும்போது கண்டிப்பாக போட்டி வந்துவிடும்; இரண்டு நல்லவர்கள் மத்தியில் போட்டிவராது;

அப்பைய தீட்சிதர் நல்லவர்; இவருக்கு ஒரு குறை உண்டு; ஒவ்வொரு நாளும் மத்தியான வேளையில் தீராத வயிற்றுவலி வந்துவிடும்; ஒரு வேலையும் செய்யமுடியாது; 

இந்த விபரம், அந்த தாதாசாரியாருக்கும் தெரியும்; எனவே ஒருநாள் வாதம் செய்ய மத்தியான வேளையை தேர்ந்தெடுக்கிறார் தாதாசாரியார்; 

வேறு வழியில்லாமல் அப்பைய தீட்சிதரும் ஒப்புக்கொள்கிறார்; போட்டி நடக்கிறது; மத்தியான வேளை வந்துவிட்டது; அப்பைய தீட்சிதருக்கு வயிற்றுவலி ஆரம்பித்துவிட்டது; தாங்கிக் கொள்ள முடியவில்லை; உடனே, அப்பைய தீட்சிதர், தன் கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து சுருட்டி தன் முன்னே வைத்துவிட்டார்: அவரின் வயிற்றுவலியை அந்த துண்டில் இறக்கிவிட்டார்; துண்டில் இறங்கிய வயிற்றுவலி, எப்படி குடலை முறுக்குமோ, அதுபோலவே அந்த துண்டின் துணியை முறுக்குகிறது; இப்போது அப்பைய தீட்சிதருக்கு வயிற்றுவலி இல்லை; எனவே வாதத்தில் கலந்து கொண்டு, தன் எதிரி தாதாசாரியாரை வெற்றி கொள்கிறார்:

போட்டி முடிகிறது; எல்லோருக்கும் ஆச்சரியம்; எப்படி, தன் வயிற்றுவலியை, ஒரு துண்டில் இறக்கி விட முடியும்; அப்படியென்றால் உண்மையில் அப்பைய தீட்சிதர் ஒரு பெரிய ஞானிதான் என்று புகழ்ந்தனர்; கூடவே அவரிடம் ஒரு சந்தேகத்தையும் கேட்டனர்; உங்கள் உடம்பில் உள்ள வயிற்றுவலியை ஒரு துணியில் இறக்கிவிடும் அளவுக்கு உங்களுக்கு சக்தி இருக்கும்போது, ஏன் அதை இன்னும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; அதையும் அவ்வாறே வெளியேற்றி விட்டு, நீங்கள் நலமாக வாழலாமே; ஏன் தினம் தினம் இந்த வயிற்றுவலியுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர்;

அவர் சொல்கிறார், 
"இந்த வயிற்றுவலி என்பது எனது முன் ஜென்ப கர்மா; இதை இந்த ஜென்மத்தில் நான் கண்டிப்பாக அனுபவித்தே ஆக வேண்டும்; இதை போக்கிக் கொள்ளும் திறமை இப்போது என்னிடம் இருந்தாலும், அப்படியே நான் இந்த பிறவியில் இதை போக்கிக் கொண்டாலும், இனி வரும் அடுத்த பிறவிகளில் இந்த கர்மா என்னைத் தொடர்ந்தே வரும்; எனவே நான் இந்த கர்மாவை இந்தப் பிறவியிலேயே அனுபவித்து முடித்துவிடவே விரும்புகிறேன்."

ஒஹோ! கர்மா என்பது விலக்கிக் கொள்ள முடியாத ஒன்றா? அதை அனுபவித்துத்தான் ஆகவேண்டுமா?


No comments:

Post a Comment