Monday, December 7, 2015

திருவாரூர் திருக்குளம்

தண்டியடிக நாயனார்
தண்டியடிக நாயனார் என்பவர் திருவாரூரில் இருந்த மிகச் சிறந்த சிவபக்தர்; இவருக்கு கண் தெரியாது; திருவாரூர் சிவன் கோயில் திருக்குளத்தை தூர்வார எல்லோரும் சென்று வேலை செய்கிறார்கள்; இந்த தண்டியடிக நாயனாருக்கோ கண் தெரியாது; இருந்தாலும், தானும் சிவனுக்கு ஒரு சேவையையாவது செய்ய வேண்டுமென நினைக்கிறார்; 

ஒரு மண் கூடையை எடுத்துக் கொண்டு அதில் மண்ணை நிரப்பி, தடவித்தடவி கரைக்கு வந்து மண்ணை கொட்டுகிறார்; 

இதைப் பார்த்த சமணர்கள் அவரை ஏளனம் செய்கிறார்கள்; இதைப் பொறுக்க மாட்டாமல், சிவனிடம் சென்று அழுகிறார்; 

சிவன், இவருக்கு கண்களைக் கொடுத்ததுடன், சமணர்களை அங்கிருந்து விரட்டியும் விடுகிறார்; சோழ மன்னர் இதை கேள்விப்பட்டு, அந்தச் சமணர்கள் கட்டியிருந்து பாழிகளை உடைத்து அதிலிருந்த கற்களை எல்லாம் கொண்டு வந்து திருக்குளத்தின் கரைகளைக் கட்டிவிட்டார்களாம்;
__________

No comments:

Post a Comment