திரிசங்குவின் அந்தர சொர்க்கம்
திரிசங்கு என்பவர் பொய்யே சொல்லாத அரிச்சந்திரனின் தந்தை; இந்த திரிசங்கு ஒரு பெரிய அரசர்; இவருக்கு சொர்க்கத்துக்கு போகவேண்டும் என்று ஆசையாம்; இறந்தபின்னர் போகவதற்க்குப் பதிலாக, தான் உயிருடன் இருக்கும்போது, சொர்க்கத்துக்குப் போய், அது எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையாம்;
தன் ராஜகுருவான வசிஷ்டரிடம், சொர்க்க ஆசையை வெளிப்படுத்துகிறார்; ஆனால், வசிஷ்டர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை; அவரின் மகனிடம் சென்று சொர்க்கம் போய் வர ஏற்பாடு செய்யச் சொல்கிறார்; அவரும் மறுத்து விடுகிறார்; குரு சொல்வதைக் கேட்க வேண்டும்; ஆனால் இந்த திரிசங்கு கேட்பதாக இல்லை;
உடனே, விசுவாமித்திரிடம் போய் கேட்கிறார்; அவர் இதற்கு ஒப்புக் கொள்கிறார்: தன் தவ வலிமையால், உண்மையான சொர்க்கத்துக்கும், இந்த பூமிக்கும் நடுவில் ஒரு சொர்க்கம் போன்ற ஒரு பகுதியை ஏற்படுத்தி, இதுதான் சொர்க்கம் என்று திரசங்குவை அங்கு கூட்டிக் கொண்டு போய் காண்பிக்கிறார்; அங்கு திரிசங்கு தங்கி இருக்கிறார்; அந்த அந்தர சொர்க்கம்தான், திரிசங்கு சொர்க்கம்; அது உண்மையான சொர்க்கம் இல்லை;
No comments:
Post a Comment