தண்டகாரணியம்
இசுவாகுவின் மகனுக்கு
தண்டன் என்று பெயர்; இவன், தன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் முரட்டுத்தனமாக திரிந்தான்; எனவே இவனின் தந்தை இசுவாகு, இவனை, விந்திய மலைப் பகுதிக்கு ஓடிப் போகுமாறு விரட்டி விட்டான்;
அங்கிருந்து விந்திய
மலைப் பகுதிக்குச் சென்ற தண்டன், தன்னுடன் வந்தவர்களைக்
கொண்டு, மதுமந்தம் என்னும் ஒரு பட்டணத்தை உருவாக்கி விட்டான்;
அதை அவனே ஆண்டும் வருகிறான்;
இந்த விந்திய மலைப்
பகுதியில்தான் சுக்கிரன் இருக்கிறார்; அவரைப் போய்ப் பார்த்த
தண்டன், அவருக்கு சீடனாகி விட்டான்; இருந்தாலும்
தண்டனுக்கு உள்ள கோணல்புத்தி மாறவில்லை; சுக்கிரனின் மகள்
அரசை என்னும் அழகி; இவளைப் பார்த்து இவள்மீது ஆசை
கொள்கிறான் அதனால் அவளைப்
பலவந்தப்படுத்தியும் விட்டான்; இதை அறிந்து சுக்கிரனுக்கு
அவன்மீது கோபம் வருகிறது;
“தந்தைக்கு அடங்காத
பிள்ளை எங்கும், யாரிடமும் அடங்க மாட்டான்போல!”
சுக்கிரன் இவனுக்கு சாபம்
இடுகிறார்; "உன் பட்டணம் முழுவதும்
மண்-மழை பொழிந்து உன் பட்டணமே அழியட்டும்" என்கிறார்; அதன்படி
மண் மழையாகப் பெய்து, அவனின் பட்டணம் அழிந்து விட்டது;
அதுதான் தண்டகாரணியம் என்று பெயராம்; இதை
தட்சிண தேசம் என்றும் சொல்கிறார்கள்;
சென்னை மழையும்
இப்படி ஏதாவது ஒரு சாபத்தால் வந்ததாக இருக்குமோ?
_______
No comments:
Post a Comment