பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா\அருளாளா = அருள் உடையவரே\
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணைய் நல்லூருடுறையும்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேலென லாமே.
\எத்தான் = எந்த வகையிலும்\
\அத்தா = தந்தையே\
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமணத்துக்கு தான் வருவதாக சிவபெருமான் உறுதி அளித்திருந்தார்; திருவெண்ணைய் நல்லூரில் சுந்தரமூர்த்திக்கு திருமணம் நடக்கிறது; ஆனால் அங்கு வந்த சிவபெருமான் ஒரு வயதான கிழவன் வேடத்தில் வந்திருக்கிறார்; அங்கு "நீ எனக்கு அடிமை; அவ்வாறு ஓலை எழுதிக் கொடுத்திருக்கிறாய்" என்று அவரின் திருமணத்தை தடுத்து அவரை ஆட்கொண்டிருக்கிறார்;
நீ என் மேல் ஒரு தமிழ் பாடு என்று கேட்டிருக்கிறார்; அதற்கு சுந்தரமூர்த்தி, "வயதான உங்களை எனக்கு யார் என்றே தெரியவில்லையே; நான் எப்படி உங்களைப் பற்றி கவி பாட முடியும்?" என்று சுந்தரமூர்த்தி கேட்கிறார்;
சிவபெருமானாக இருக்கும் அந்த கிழவர், "நீ, என்னை ஒருமுறை, பித்தா என்று கூப்பிட்டிருக்கிறாய்; எனவே பித்தா என்றே ஆரம்பித்து பாடு" என்று சொல்கிறார்;
சுந்தரமூர்த்தியும், இந்தப் பாடலான, "பித்தா பிறைசூடிய பெருமானே.... என்று ஆரம்பிக்கிறார்;
No comments:
Post a Comment