திருநீல நக்க நாயனார்
இந்த நாயனார் ஒரு சிவ பக்தர்; இந்த சிவபக்தர்கள் எல்லாம் சிவனைத்தவிர வேறு ஒன்றையும் தேட மாட்டார்கள்;
ஓருநாள், சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, சிவனின் மீது ஒரு சிலந்திப் பூச்சி சிவனின் உடலில் உட்கார்ந்து விட்டது; இதைப்பார்த்த அந்த நாயனாரின் மனைவி அந்த பூச்சியை வாயால் ஊதி விட்டார்; சிவன் மீது அதிகப் பிரசங்கித் தனமாக வாயில் மனைவி ஊதிவிட்டார் என்று மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருந்து விட்டார்; மனைவியும் கோபித்துக் கொண்டு தாய் வீடு போய்விட்டார்;
இந்த நாயனார் தனியாக படுத்துக் கொண்டிருக்கும்போது, சிவன் நேரில் வந்து, அட பக்தி பண்டாரமே! என்னைப் பார்; என் உடலைப் பார்; உன் மனைவி ஊதி விட்ட இடம் மட்டும்தான், என் உடலில் நன்றாக இருக்கிறது; மற்ற இடங்களில் எல்லாம் அந்த சிலந்தி பூச்சி கடியால் கொப்புளம் வந்து வீங்கி விட்டது பார்! என்று சொல்லி இருக்கிறார்: இதற்குப்போய் உன் மனைவியை கோபித்து விரட்டி விட்டிருக்கிறாயே என்று சிவன் கோபித்துக் கொள்கிறார்; உடனே இந்த நாயனார் மனைவியை திரும்ப அழைத்து வந்திருக்கிறார்; கடைசிவரை மனைவியுடன் வாழ்ந்து சிவனுக்கு திருத்தொண்டும் செய்திருக்கிறார்;
இப்போதும் இவ்வாறு சிவன் வந்து கணவர்களுக்கு புத்திமதியும் சொல்லலாம்!
No comments:
Post a Comment