Saturday, December 19, 2015

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்
சைவ சமய குரவர்கள் நால்வரும் ஒருவர் இந்த சுந்தரமூர்த்தி நாயனார்; கைலாசத்தில் சிவபெருமான் அடியார்களுள் ஒருவராய் "ஆலால சுந்தரர்" என்னும் பெயருடன் இருந்தார்; அங்கு உமாதேவியருக்கு சேடிகள் இருக்கின்றனர்; இந்த சேடிகள் மீது, இந்த ஆலால சுந்தரர் ஆசைப்பட்டிருக்கிறார்; இதைத் தெரிந்த சிவன், இவரை மானிடாரகப் பிறந்து கஷ்டப்ட பூலோகத்துக்கு அனுப்பி விட்டார்; இங்கு திருநாவலூரில் சடையனாருக்கு மகனாகப் பிறக்கிறார்; அந்த  சேடியர்களில் இருவர், இங்கு பரவையார் என்ற பெயரில் திருவாரூரிலும், சங்கிலியார் என்ற சேடி திருவொற்றியூரிலும் பிறக்கிறார்கள்; ஆனால், ஆலாலசுந்தரர், கைலாசத்தை விட்டு பூவுலகுக்கு கிளம்புவதற்கு முன், வருந்தி அழுதிருக்கிறார்; இதைக்கண்ட சிவன், அவருக்கு ஆறுதல்கூறி, "நான் உன்னை பூலோகத்தில் வந்து ஆட்கொள்வேன், கவலைப்படாதே" என்று கூறி உள்ளார்; சுந்தரமூர்த்தியும் பூலோகத்தில் பிறந்து, திருமண வயதை அடைந்துள்ளார்; அப்போது, அவரின் திருமண நாளில் அங்கு வந்த சிவன், ஒரு கிழவன் வேடத்தில் வந்து, "நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது; நீ, என் அடிமை; என் அனுமதியில்லாமல் திருமணம் செய்ய முடியாது" என்று தடுத்திருக்கிறார்; "உங்களை நான் எங்கும் பார்த்ததில்லையே, எப்படி நான் உங்களின் அடிமையாக இருக்க முடியும்" என்று சுந்தரமூர்த்தி கேட்டிருக்கிறார்; அவரை தனியே அழைத்துச் சென்ற சிவன், தான் யார் என்று காண்பித்து, அவரின் பழைய பிறவியை நினைவுபடுத்தி அருள் புரிந்தார்; திருவாரூரில் இருக்கும்போது, அங்குள்ள பரவையாரை பார்த்து அவரிடம் மயங்கி, சிவனை அவருக்கு தூது அனுப்புகிறார்; அவரை திருமணம் செய்து அவருடன் வாழ்கிறார்; பின்னர் திருவொற்றியூருக்கு வருகிறார்; அங்கு சங்கிலியாரையும் சந்தித்து அவருடன் வாழ்கிறார்; சங்கிலியாரிடம் பொய் சொல்லி வாழ்கிறார்; அதனால் இவருக்கு கண்பார்வை போய்விடுகிறது; அதனால் இவர் சிவன் மீது பதிகம்பாடி பார்வை பெறுகிறார்; சிவபெருமானுக்கு நெருங்கிய தோழராக ஆலாலசுந்தரம் என்று கைலாசத்தில் இருந்தபோதும், அங்கு செய்த தவறுக்காக மனித பிறவி எடுத்து, கஷ்டப்பட்டு, பின் கடவுளை அடைகிறார்; 

No comments:

Post a Comment