தத்துவராயரின்
அஞ்ஞவதைப்பரணி
தத்துவராயர் குருவைத்
தேடி அலைகிறார்; வடமொழி, தென்மொழி
இரண்டிலும் மிகப் பெரிய புலமை பெற்ற குரு ஒருவரைத் தேடி அலைகிறார்: தன்னுடன் தன் சக
நண்பரான (சகாத்தியர் = கிளாஸ்மெட்) சொரூபாநந்தர் என்பவரையும் சேர்த்துக் கொண்டு தேடித்
திரிந்தனர்; எங்கும் கிடைக்கவில்லையாம்; இருவரும் ஒரு போட்டியும் வைத்துக் கொள்கின்றனர்; யார்
முதலில் குருவைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவரை, நம்மில் மற்றவர் குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்துக்
கொள்கின்றனர்;
தத்துவராயர்
வடநாட்டுப் பக்கமாக போகிறார்; மற்றவரான சொரூபாநந்தர்
தென்நாட்டுப் பக்கமாகப் போகிறார்; சொரூபாநந்தருக்கு குரு கிடைத்து விட்டார்; அவரிடம்
ஞான நூல்கள் எல்லாவைற்றையும் கற்று தெளிந்து, மெய்யுணர்ந்தார்;
போட்டியின் விதிப்படி, தத்துவராயர், சொரூபாநந்தரை தன்
குருவாக ஏற்று அவரிடமே கற்கிறார்; தத்துவராயருக்கு இயல்பாகவே
பாடும் வல்லமை உண்டு; அந்த திறமையைக் கொண்டு, "சசிவர்ணபோதம், பாடுதுறை, சிவப்பிரகாசர்
வெண்பா, தத்துவாமிர்தம், அமிர்தசாகர
வெண்பா, சானவியோதன் கலம்பகம், தசரங்கம்,
நெஞ்சுவிடுதூது, கலிமடல், கலித்துறையந்தாதி, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி என பல நூல்களை இயற்றிவிட்டார்;
அஞ்ஞவதைப்பரணி பாடிய
சாதுரியம் மிகவும் அதிசயிக்கத்தக்கதாம்;
______________
No comments:
Post a Comment