Monday, December 7, 2015

அஞ்ஞவதைப்பரணி

தத்துவராயரின் அஞ்ஞவதைப்பரணி

தத்துவராயர் குருவைத் தேடி அலைகிறார்; வடமொழி, தென்மொழி இரண்டிலும் மிகப் பெரிய புலமை பெற்ற குரு ஒருவரைத் தேடி அலைகிறார்: தன்னுடன் தன் சக நண்பரான (சகாத்தியர் = கிளாஸ்மெட்) சொரூபாநந்தர் என்பவரையும் சேர்த்துக் கொண்டு தேடித் திரிந்தனர்; எங்கும் கிடைக்கவில்லையாம்; இருவரும் ஒரு போட்டியும் வைத்துக் கொள்கின்றனர்; யார் முதலில் குருவைக் கண்டுபிடிக்கிறார்களோ, அவரை, நம்மில் மற்றவர் குருவாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கின்றனர்;

தத்துவராயர் வடநாட்டுப் பக்கமாக போகிறார்; மற்றவரான சொரூபாநந்தர் தென்நாட்டுப் பக்கமாகப் போகிறார்சொரூபாநந்தருக்கு குரு கிடைத்து விட்டார்; அவரிடம் ஞான நூல்கள் எல்லாவைற்றையும் கற்று தெளிந்து, மெய்யுணர்ந்தார்;

போட்டியின் விதிப்படி, தத்துவராயர், சொரூபாநந்தரை தன் குருவாக ஏற்று அவரிடமே கற்கிறார்; தத்துவராயருக்கு இயல்பாகவே பாடும் வல்லமை உண்டு; அந்த திறமையைக் கொண்டு, "சசிவர்ணபோதம், பாடுதுறை, சிவப்பிரகாசர் வெண்பா, தத்துவாமிர்தம், அமிர்தசாகர வெண்பா, சானவியோதன் கலம்பகம், தசரங்கம், நெஞ்சுவிடுதூது, கலிமடல், கலித்துறையந்தாதி, அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி என பல நூல்களை இயற்றிவிட்டார்;


அஞ்ஞவதைப்பரணி பாடிய சாதுரியம் மிகவும் அதிசயிக்கத்தக்கதாம்;
______________

No comments:

Post a Comment