Sunday, December 13, 2015

வீழ்க தண்புனல்...


வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் நீங்கவே.

\ஆன் இனம் = பசுக்கூட்டம்\
\புனல் = மழை\
\ஆழ்க = அமிழ்ந்து போக\

திருஞானசம்மந்தர், சமணர்களால் தீர்க்க முடியாத, பாண்டிய மன்னனின் வெப்பு நோயை தீர்க்கிறார்; சமணர்கள் போட்டிக்கு வருகிறார்கள்; அவரவர் சமய நூல்களான ஏடுகளை ஆற்றில் மிதக்க விடுவது என்றும், எந்த ஏடு ஆற்றை எதிர்ந்து நீந்துகிறதோ அதுவே உண்மையான சமயம் என்றும் போட்டி; திருஞானசம்மந்தர் இந்தப் பாடலைத்தான் அவரின் ஏட்டில் எழுதி ஆற்றில் மிதக்க விடுகிறார்; அது ஆற்றின் நீரை எதிர்த்து பயணிக்கிறது; மற்றவர்களின் ஏடுகள் எல்லாம் ஆற்றின் போக்கிலேயே போய் கடலில் சேர்கிறது; 

No comments:

Post a Comment