Thursday, December 24, 2015

கைந்நீத்து நீத்துவ...

விதானமாலை-4

முந்நீர் கடல்களனைத்தினையும் ஒரு மூர்த்தத்தினிற்
கைந்நீத்து நீத்துவ னென்பவன் போலக் கலை வடசொற்
தொன்னூற் பல விதச் சோதிட முற்று என் புன் சொற்களால்
நன்னூலெனச் சொல்லி வந்து நின்றேன் நகை செய்குவரே!

ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர் என்னும் மூன்று வகை நீர் அமைந்த சமுத்திரங்கள் எல்லாவற்றையும் ஒரு முகூர்த்த காலத்துக்குள் கை நீச்சலாக நீந்திக் கடப்பவன் போல, கலைகளையுடைய வடமொழி நூல் பலவற்றினும் உள்ள சோதிடம் முழுவதையும் எனது பயன்றற சொற்களினால் தமிழ் மொழியில் பாடி அதனை நன்லூல் என்று சொல்லி இங்கு வந்து நின்றேன்; அறிஞர்கள் இதனைக் கண்டு சிரிப்பார்கள்;


No comments:

Post a Comment