தர்ம பறவைகள் (தர்ம பக்ஷிகள்)
விபுலன் என்று ஒரு முனிவர்; இவருக்கு இரண்டு மகன்கள், சுகுருசன், தும்புரன் என்று பெயர்கள்;
ஒருநாள், இந்திரன் கழுகுப் பறவை உருவமாக மாறி, இந்த முனிவரின் மூத்த மகனாக குகுருசன் என்றவனிடம் வந்து, தனக்கு மனித மாமிசம் வேண்டும் என்று கேட்கிறான்; சுகுருசனுக்கு நான்கு மகன்கள் இருக்கிறார்கள்; அந்த நான்கு மகன்களைப் பார்த்து, உங்கள் நால்வரில் யார் இந்த கழுகுக்கு இரையாகப் போகிறீர்கள் என்று கேட்கிறார்; நால்வரும் இதற்கு உடன்படவில்லை;
எனவே தந்தையின் வாக்கை காப்பாற்றாத பிள்ளைகள் என்று கோபம் கொண்டு, அந்த நான்கு மகன்களையும் பறவைகள் ஆகும்படி சபிக்கிறார்; அந்த நான்கு பறவைகளின் பெயர்கள், பிங்காட்சன், விபோதன், சுபுத்திரன், சுமுகி ஆகியோர்;
இந்த நான்கு பறவைகளும்தான், ஜைமினி முனிவரின் சந்தேகத்தை போக்கி, சாப நிவர்த்தி பெற்று மனிதர்கள் ஆனவர்கள் என்று மார்க்கடேய புராணம் சொல்கிறது;
No comments:
Post a Comment