Saturday, December 12, 2015

ரோஷக்கார திருநீலகண்டர்

திருநீலகண்ட நாயனார்;

இவர் சிவபக்தர்; இவருக்கு திருமணம் ஆகிவிட்டது; ஆனாலும், மற்ற பெண்களைக் கண்டால், அவர்கள் பின்னால் திரிவாராம்; இந்தமாதிரி புத்தியுடைய கணவனுக்கு பாடம் புகட்ட நினைத்த மனைவி, ஒருநாள் கடும் கோபத்தில், "திருநீலகண்டம் அறிய இனி என்னை தீண்டாதீர் (தொடாதீர்)" என்று ஆணையிட்டு விட்டார்; 

இதுமுதல், மனைவி உட்பட எந்தப் பெண்ணையும் ஏரெடுத்தும் பார்க்காமல், சிவனின் சேவையிலேயே இருந்து விட்டார்; இவருக்கு வயதாகி விட்டது; மூப்பு நிலையில், சிவன் இவரிடம் வந்து ஒரு மண் ஓட்டைக் கொடுத்துவிட்டு, "உன் மனைவியின் கரங்களைப் பற்றிக் கொண்டு இந்த ஓட்டுடன் இந்த குளத்தில் நீராடினால், நீங்கள் இருவரும் மறுபடியும் இளமை வந்து, நீங்கள் தொலைத்த இளமை வாழ்வை மீண்டும் வாழ்வீர்கள்" என்று சொல்லி இருக்கிறார்:

அப்போதும், தன் மனைவி சொன்ன ஆணையை மீற முடியவில்லை; அவளின் கையைப் பிடிக்க முடியாமல், ஒரு குச்சியை நீட்டி அதை தன் மனைவியைப் பிடிக்கச் சொல்லி, அதன் மறுபக்கத்தை இவர் பிடித்துக் கொண்டு, அந்த குளத்தில் இருவரும் மூழ்கி இளமையை பெற்று, மறுபடியும் யோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள்:
"ரோஷக்கார கணவன் போல!"

No comments:

Post a Comment