திரிபுராசுரர்
தாரகாசுரனுக்கு மூன்று மகன்கள்; அவர்கள், கமலாக்ஷன், வித்தியுன்மாலி, தாராகாக்ஷன்.
இவர்கள் மூவரும் சிவபெருமனை நினைத்து பெரிய தவத்தில் இருந்து வரம் பெற்றுவிட்டனர்; மூவருக்கும் மூன்று கோட்டைகள் கிடைக்கின்றன; ஒன்று, இரும்பு கோட்டை, மற்றொன்று வெள்ளி கோட்டை, மூன்றாவது தங்க கோட்டை; இதில் இந்த மூவரும் ஆட்சி செய்கின்றனர்: இந்த கோட்டைகள் பறக்கும் தன்மை கொண்டது; எனவே எப்போதும் இதில் இவர்கள் மூவரும் பறந்து கொண்டே இருப்பார்கள்:
கடவுளிடம் வரம் வாங்கினால், ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பு வரும்போலும்! பறந்துகொண்டே மற்ற நாடுகளின் மேல் பறந்து அங்கு உட்கார்ந்து அந்த நகரையே அழுத்தி விடுவார்கள்; அதனால் அந்த நகரம் அழிந்துவிடுமாம்; இப்படி பல நகர்களை அழித்து விட்டார்கள்; சிவனிடம் வரம் பெற்றவர்கள் என்பதால் இவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை;
இந்த கொடுமை, விஷ்ணுவின் காதுகளுக்குப் போகிறது; அவர், நாரதரை அழைத்து யோசனை சொல்கிறார்: நாரதர் இந்த மூவரையும் பார்த்து, பாஷண்ட மதத்தை உபதேசிக்கிறார்; அதை கேட்டபின்னர் இந்த மூவரும் சிவனுக்கு எதிராக ஆகி விட்டார்கள்;
இதை கேள்விப்பட்ட சிவன், அந்த மூவர் மீதும் கோபம் கொண்டு, அவர்களை அழித்துவிடுகிறார்; அவ்வாறு அழிந்தபின்னர் அவர்களை தன் கணங்களோடு சேர்த்துக் கொள்கிறார்;
No comments:
Post a Comment