Wednesday, December 9, 2015

ஜனகன்

ஜனகன்
இவர் மிதிலாபுரிக்கு அரசன்; ஹரஸ்ர ரோமன் மகன்; இந்த ஜனக மன்னரின் புத்திரிதான் சீதாதேவி; (பின்னர் ஸ்ரீராமனுக்கு மனைவியானவர்); 

இந்த ஜனகன் ஒரு மகாஞானியாம்; 

ஒருநாள், இவரது அரண்மனை தீப்பிடித்து எரிகிறது; எல்லோரும் பதறி அரண்மனையைக் காப்பாற்ற ஓடுகிறார்கள்; இந்த ஜனக மன்னரிடம் ஒரு ரிஷி நட்புடன் தங்கி இருக்கிறார்: இந்த முனிவர் பெயர் சுக முனிவர்; இந்த முனிவர், அரண்மனை தீப்பிடித்துக் கொண்டது என்று கேள்விப் பட்டவுடன், தான் பூஜைக்காக காயப் போட்டிருந்த மாட்டுச்சாண வரட்டி எரிந்துவிடுமே என்று ஓடோடிப் போய் அதை பத்திரப்படுத்தினாராம்;

இதைப் பார்த்த ஜனக மன்னர், அவரைப் பார்த்து ஏளனமாக, அரண்மனையே எரிகிறது; உமக்கு வரட்டு முக்கியமாய் போய்விட்டது; இதுதான் உன் ஞானமா? என்று கேட்டு அவருக்கு உலக இயல்பை உணர்த்தி திருத்தினாராம்;


No comments:

Post a Comment