விதானமாலை-2
ஒன்றாய் பலவாய் சுடர் இரண்டாய் ஒளிர் மூன்று உருவாய்
என்று அவை யீற்றில் ஆருயுராய் அனாதியாயும் உம்பர்
சென்றா சொழித்திட சங்காழி ஏந்தி திருவினோடுங்
குன்றாது நின்ற குணன் சரணாம்புயங் கூறுவனே.
ஏகமாயும், அனேகமாயும், சூரிய சந்திரராகிய இரு சுடர்களாகியும், விளங்குகிற சங்கருடணன், பிரத்தியுமினன்,அநிருத்தன் என்னும் திரி மூர்த்திகளாயும், அவர்களல்லாத சீவசகங்களாயும், அவற்றிற்கு உள்ளுயிராயும், பிரமா முதலிய தேவர்கள் குறையிரந்து சென்று வணங்கி தங்குற்றத்தை தீர்க்கப்பொருட்டு சங்கு சக்கரந் தரித்து இலக்குமியுடன் குறைவின்றி நிலைபெற்றவருமான நாராயண மூர்த்தியுனுடைய பாத தாமரைகளைப் புகழ்ந்து கூறுவனே.
No comments:
Post a Comment