மதம் மாறிய திருநாவுக்கரசர்
இவர் குழந்தைப் பருவத்தில் இவரின் பெயர் மருணீக்கியார்; இவர் கல்வியில் சிறந்த விளங்கினார்; இந்த பிரபஞ்சத்தில் வாழ்வு நிரந்தரம் இல்லை என்று கூறும் கொள்கையுடைய சமண சமயத்தில் போய் சேர்ந்து துறவறம் மேற்கொண்டார்;
ஆனால் இவருக்கு தீராத வயிற்றுவலி வந்துகொண்டே இருந்தது; சமண சமய ஆசாரியார்கள் எவ்வளவோ மந்திர தந்திரங்களை செய்தபோதும், இவரின் வயிற்றுவலியைக் குணப்படுத்தவே முடியவில்லை;
இவரின் மூத்த சகோதரி திலகவதியார்; இவர் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்; இவர் ஒருநாள் தன் தம்பியைச் சந்தித்து, அவருக்கு சைவ சமயத்தில் உள்ள "பஞ்சாச்சர உபதேசத்தை" சொல்லிக் கொடுத்துள்ளார்; இதைக் கேட்டவுடன் இவருக்கு இருந்த வயிற்றுவலி விலகி விட்டது; உடனே இவர் சைவ சமயத்தில் மாறி சிவபக்தியில் இறங்கி விட்டார்; நேராக, வீரட்டானேஸ்வர் கோயில் சென்று அங்கு விழுந்து வணங்கி எழும்போது, இவருக்கு தமிழ்ச் செய்யுள் பாடும் அற்புத சக்தி கிடைத்ததாம்; அதனால், அற்புதமான தேவாரப் பாடல்களை பாடியுள்ளார்; அதுமுதல் இவருக்கு திருநாவுக்கரசர் என்று பெயர் வந்ததாம்;
இவர் மதம் மாறி விட்டார் என்று தெரிந்த சமணர்கள், அந்த நாட்டு அரசனிடம் கோள் சொல்லி, இவரை கல்லைக்கட்டி கடலில் போட்டுவிட்டார்கள்: அந்தக் கல்லையே தெப்பமாக மாற்றி மிதந்து வந்துவிட்டார்:
"கல்லினோடெனைப்பூட்டி அமண்கையர்,
ஒல்லைநீர்புக நூக்கவென்வாக்கினால்,
நெல்லுநீள் வயல் நீலக்குடியரன்,
நல்லநாம நவிற்றி யுய்ந்தேனன்றே".
No comments:
Post a Comment