Wednesday, December 9, 2015

கிருஷ்ணனின் நிரியாணம்

ஜகநாதம்

ஸ்ரீகிருஷ்ணன் நிரியாணம் பெற்று விட்டார்; அவரை தகனம் செய்கின்றனர்; அவ்வாறு அவரை தகனம் செய்யும்போது, சமுத்திரம் (கடல்) பொங்கி தூவாரகைக்கு வந்து துவாரகையையே சூழ்ந்து மூடியது; 

அப்போது, அவர் தகனமாகிக் கொண்டிருந்த அந்த உடலை கடல் நீரானது வாரி எடுத்துக் கொண்டு ஜகநாதம் என்னும் விஷ்ணு கோயில் இருக்கும் இடத்துக்கு கொண்டு போனது; 

அங்கிருந்தவர்கள், இந்த உடல், ஸ்ரீகிருஷ்ணனின் உடல் என்று அறிந்து கொண்டு, அதை ஒரு மரத்தில் சபுடீகரணம் பண்ணி பின்னர் அந்த மரத்தை விக்கிரமாக்கி அங்கேயே ஸ்தாபித்தனர்; 

No comments:

Post a Comment