ஜடபரதர்
ஒரு மான் காட்டில் தண்ணீர் தாகத்துடன் சுற்றித் திரிகிறது; கங்கை ஆற்றில் நீர் அருந்த வருகிறது; அங்கு சென்று ஆற்றுக்குள் இறங்கி நீர் அருந்துகிறது; அது ஒரு நிறைமாத கர்ப்பிணி மான்; அதன் தாகம் தீர்ந்தவுடன் கரையேற நினைக்கிறது; அப்போது ஒரு சிங்கத்தின் கர்ஜனையை கேட்கிறது; மானுக்கு குலை நடுங்கி விட்டது; கர்ப்பம் கலங்கி, பிரசவம் ஆகிவிடுகிறது;
அந்த மான் குட்டி ஆற்றின் நீரிலேயே விழுந்து கங்கையிலேயே மிதந்து போகிறது; தன் கண்ணெதிரே மானின் கன்று மிதந்து போவதை பார்த்து தாய் மான் நைந்து உருகி வருந்துகிறது; அந்த கன்றை ஒருவர் எடுத்து ஆசையுடன் வளர்க்கிறார்; அவர் இறக்கும் நிலையில், இந்த கன்றின் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்; அதன் நினைவாகவே இறக்கிறார்;
கடைசி நினைவு மான் கன்றின் மீது இருந்ததால், மறு பிறவியில் மானாகப் பிறந்து அந்த மான் கன்றை வளர்க்கிறார்: அந்த மான் பிறவி முடிந்தவுடன், ஒரு மானிடராகப் பிறந்து, எல்லா கல்வியும் கற்று ஞானம் பெற்ற போதிலும், ஒன்றுமே தெரியாதவர்போல நடித்துக் கொண்டிருக்கிறார்: எனவே இவரை ஜடன்= மூடன் என்று சொல்கிறார்கள்; எனவே இந்தப் பிறவியிலும் அந்த மான் கன்றின் நினைவாகவே இருந்ததால், காட்டுக்குச் சென்று தவம் செய்கிறார்:
ஒருநாள், இவரை இழுத்துக் கொண்டுபோய், காளிக்கு பலி கொடுக்க முயல்கிறார்கள்: ஆனால், காளியே நேரில் தோன்றி, அவர்களை விரட்டி அடித்து இவரை காப்பாற்றுகிறாராம்;
மற்றொரு சமயம், அரசனது சிவிகையைச் சுமக்க ஆள் கிடைக்காமல் இவரை அழைத்துச் செல்கின்றனர்; ஆனால் அரசன் இவரைப் பார்த்ததும் இவரது கால்களில் விழுந்து வணங்கினாராம்:
அதன்பின், அடுத்த பிறவி கிடைத்ததாம், அதிலும் அதே மான் கன்றின் மீது இருந்த கருணை மாறாமல் இருந்ததாம்;
_________
No comments:
Post a Comment