Saturday, December 12, 2015

தாடகையின் ஆயிரம் யானை பலம்

தாடகை
தாடகை முன் ஜென்மத்தில் இயல்பான பெண்ணாகவே இருந்திருக்கிறாள்; பின்னர் ஒரு சாபத்தால்தான் ராட்சசி ஆகிவிட்டாள்;

இவள் இயல்பில், சுகேதன் என்னும் ஒரு யக்ஷனின் மகள்; இவளுக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாம்; 

ஒருநாள், காட்டில் தவத்தில் இருந்த அகஸ்தியரை அவரின் ஆசிரமத்துக்குள் நுழைந்து பயப்படுத்தி இருக்கிறாள்; அகஸ்தியருக்கு கோபம் உண்டாகி, நீயும் உன் மகன்களும் ராட்சசிளாக ஆகக் கடவது என்று சாபமிட்டாராம்; 
அதுமுதல் இவள் ராட்ச்சியாக இருந்திருக்கிறாள்;

இவளின் மகன்தான் மாரீசன்;

இந்த ராட்சசிதான், விசுவாமித்திரரின் யாகத்தை கெடுப்பதற்காக வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள்;

அதற்காகவே விசுவாமித்திரர், இராமனை அழைத்துக் கொண்டு வந்து, தன் யாகத்துக்கு காவல் வைத்தார்; ராமர் இந்த ராட்சசியை கொன்றார்;

No comments:

Post a Comment