தாடகை
தாடகை முன் ஜென்மத்தில் இயல்பான பெண்ணாகவே இருந்திருக்கிறாள்; பின்னர் ஒரு சாபத்தால்தான் ராட்சசி ஆகிவிட்டாள்;
இவள் இயல்பில், சுகேதன் என்னும் ஒரு யக்ஷனின் மகள்; இவளுக்கு ஆயிரம் யானைகளின் பலம் உண்டாம்;
ஒருநாள், காட்டில் தவத்தில் இருந்த அகஸ்தியரை அவரின் ஆசிரமத்துக்குள் நுழைந்து பயப்படுத்தி இருக்கிறாள்; அகஸ்தியருக்கு கோபம் உண்டாகி, நீயும் உன் மகன்களும் ராட்சசிளாக ஆகக் கடவது என்று சாபமிட்டாராம்;
அதுமுதல் இவள் ராட்ச்சியாக இருந்திருக்கிறாள்;
இவளின் மகன்தான் மாரீசன்;
இந்த ராட்சசிதான், விசுவாமித்திரரின் யாகத்தை கெடுப்பதற்காக வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கிறாள்;
அதற்காகவே விசுவாமித்திரர், இராமனை அழைத்துக் கொண்டு வந்து, தன் யாகத்துக்கு காவல் வைத்தார்; ராமர் இந்த ராட்சசியை கொன்றார்;
No comments:
Post a Comment