சத்தியபாமை:
யாதவர் குலத்தில் ஒரு வம்சம் "விருஷ்ணி வம்சம்". இந்த வம்சத்தை சேர்ந்த மன்னன் பெயர் சத்திரஜித்து.
இந்த மன்னன் சத்திரஜித்துவின் மகள்தான் "சத்தியபாமை."
இந்த சத்தியபாமைதான் ஸ்ரீகிருஷ்ணனின் பிரியநாயகி.
இவளுக்காகத்தான், கிருஷ்ணன், தேவ லோகத்தில் இருந்த பாரிஜாத மரத்தையே அங்கிருந்து பெயர்த்துக் கொண்டு வந்து இந்த சத்தியபாமையிடம் கொடுத்தானாம்.
இதை உவமையாக வைத்துத்தான், கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டால், காதலன் மாமலையையே கையில் கொண்டு வருவான் என்று சொல்லி கொண்டார்கள் போலும்.
கடவுள்கள் செய்ததைதான் மனிதன் தொடருகிறான் போல.
No comments:
Post a Comment