Tuesday, August 18, 2015

திருடர் வஞ்சகர் காமிகள்

திருடர் வஞ்சகர் காமிகள் செல்வமார்
குருடர் மற்றோ ருபிமையைக் கொள்ளைகொண்
முருடர் கோபிகண் மூர்க்கர்கு தர்க்கராம்
புருடர்க் கீண்டு புகலரி தாகுமால்.

திருடர் வஞ்சகர் காமிகள் = திருடர், ஏமாற்றி தீமை செய்யும் வஞ்சகர், பேராசைக்காரர்கள்;

செல்வம் ஆர் குருடர் = செல்வம் ஆனதினால் அறிவுக் குருடு ஆனவர்கள்;

மற்றோர் உரிமையைக் கொள்ளை கொள் முருடர் = பிறரது பொருளைக் கவர்ந்து கொள்ளும் முரட்டு குணம் கொண்டவர்கள்;

கோபிகள் = கோபக்காரர்கள்;

மூர்க்கர் = கொடியவர்கள்;

குதர்க்காராம் புருடர் = விதண்டாவாதம் செய்யும் புரட்டுக்காரர்கள்;

ஈண்டு புகல் அரிதாம் = மோட்சத்தின் வாயிலில் புகுந்து போவது முடியாது; (சொர்க்கம் திறந்திருக்காது).

No comments:

Post a Comment