Friday, August 28, 2015

ஆதியின் மூலமான ஐங்கரன்....

ஆதிசங்கரரின் ஆயுட்பாவகம்

ஓதிய பெரியோர் வாக்கா லுரைத்திடும் நூல்க டன்னை
மேதினி தனிலே நன்றாய் விளங்கிடச் செய்யு ளாகச்
சோதிடப் பலன்க ளெல்லாம் தொகுத்துயான் விளம்பு தற்கு
ஆதியின் மூல மான வைங்கரன் காப்ப தாமே.

செங்கண்மா லருளி னாலே செகந்தனில் மனுவுக் கெல்லாம்ய
இங்கித மாக நல்ல சோதிட மியம்ப வேண்டித்
திங்களின் நிறத்தை யொத்த தேவியாய் வந்து தித்த
பங்கய முகத்தான் பால சரஸ்வதி பாதங் காப்பாம்.

(ஆதிசங்கரர் அருளிய ஆயுட்பாவகம் -- கடவுள் வணக்கத்தின் பாடல்கள்)

No comments:

Post a Comment