Thursday, August 13, 2015

பனுவலேகிளவி நூலாம்...

தனம் = முலை, பொன், பசுவின்கன்று, சந்தனம், பசு.
கனவு = நித்திரை, மயக்கம்.
கலிங்கம் = வானம்பாடி, சீலை (புடைவை).
கனை = நெருக்கம், ஓசை.
கவரி == சாமரம், எருமை.
பனுவல் = சொல், நூல்,
பட்டபை = ஊர்ப்புறம், தோட்டம்.

"தனமுலைபொன்னான் கன்று சந்தமுத்தனமைம் பேராம்
கனவு நித்திரைமையற்பேர் கலிங்கஞ்சாதகப்புள்ளாடை
கனைசெறிவொலியாமென்ப கவரியே சவரிமேதி
பனுவலேகிளவி நூலாம் படப்பையூர்ப் புறமே தோட்டம்."

No comments:

Post a Comment