கிராதார்ச்சுனீயம்
வடமொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் இதுவும் ஒன்று.
வடமொழி ஐம்பெரும் காப்பியங்கள்:
1) நைடதம்
2) இரகுவம்சம்
3) சிசுபாலவதம்
4) குமாரசம்பவம்
5) கிராதார்ச்சுனீயம்
இந்த கிராதார்ச்சுனியத்தை இயற்றியவர் வடமொழி பண்டிதர் பாரவி என்னும் புலவர்.
துவைத வனத்தில் இருந்து தர்மனிடம், துரியோதனின் அரசியலைப்பற்றி ஒந்த காட்டின் வேடுவன் ஏதோ கூறுகிறான். அப்போது அவன் உடன் இருந்தவர்கள் ஏதேதோ கூறி குழப்புகின்றனர். அவர்களுக்கு தர்மன் நீதிகளைச் சொல்கிறான். அப்போது வியாச முனிவர் அங்கு வருகிறார்.
அங்கு வந்த வியாசர், அர்ச்சுனன் தவம் செய்து பாசுபதம் பெறுவதற்காக மந்திரத்தை சொல்கிறார். அதைக்கேட்டுக் கொண்டு இமயகிரியை நோக்கிச் செல்கிறான். அவனுக்கு துணையாக இயக்கன் என்பவன் சென்று வழி சொல்கிறான்.
இந்திரகீலத்தில் அர்ச்சுனன் கடும் தவம் புரிகிறான். இந்திரன், அவன் தவத்தை கலைக்க நினைத்து, தேவலோகப் பெண்களை அனுப்புகிறான். அது முடியாமல், இந்திரனே முனிவர் வேடம்தாங்கி வந்து தவத்தை கலக்க நினைத்து அதுவும் முடியாமல் போக, அவனும் ஒரு மந்திரத்தை அர்ச்சுனனுக்கு சொல்லி கொடுத்தவிட்டுப் போகிறான்.
பன்றி உருவத்தில் தோன்றிய மூகன் என்ற அசுரன் அர்ச்சுனன் தவத்தை கலைக்க முயல்கிறான். அதுகண்ட சிவபெருமான் அங்கு வேடம் வேடத்தில் வந்து அந்த பன்றியைக் கொல்கிறார். சிவனுக்கும் அரச்சுனுக்கும் அந்த பன்றியைக் கொன்ற விஷயத்தில் சண்டை நடக்கிறது. பின்னர், சிவன் தான் யார் என்று கூறி, பாசுபதம் கொடுத்தார். இதுவே இந்த கதையாம்.
No comments:
Post a Comment