தேவாரம்
தேவர்களின் ஆரம். தேவர்களுக்கு சாத்தும் மலர் மாலை. சொல் மாலை இது.
அப்பர், சம்மந்தர், சுந்தரர் ஆகிய மூவர்களின் பாடல் தொகுப்பு இது. இவைகள் மொத்தம் தொண்ணூற்றாறாயிரம் பதிகம் கொண்டவை. இவற்றில் பல அழிந்துவிட்டனவாம். மீதி இருப்பவை எழுநூற்றுத் தொண்ணூற்றைந்து. மன்னர்களுக்குள் போர் ஏற்பட்டபோது, அவைகளில் சிக்கி தீயில் கருதி அழித்துவிட்டனவாம்.
அபயர்குலசேகர சோழன் என்ற மன்னர் இருந்தார். அவர் ஒருமுறை, ஒரு புலவர் பாடிய பாட்டைக் கேட்கிறார். மிக இனிமையாக இருக்கிறதே இந்த பாடல் என்று ஆச்சரியப்படுகிறார். அப்போது அந்தப் புலவர் சொல்கிறார். இது தேவராப் பாடல்களில் ஒன்று என்று கூறுகிறார். இவ்வாறான பிற பாடல்கள் எங்கு கிடைக்கும் என்று தேடி அலைகிறார். கிடைக்கவில்லை. பின்னர் நம்பியாண்டார நம்பி என்பவரிடம் சென்று 795 பதிகங்கள் மட்டும் எஞ்சி இருப்பதாக அறிந்து அவரிடமிருந்து அந்த பாடல்களைப் பெற்றுக் கொண்டாராம்.
அவைகள்தான் இப்போதுள்ள தேவாரப்பாடல்கள்.
No comments:
Post a Comment