Friday, August 21, 2015

ஐங்கரற்கும் ஆறு தலை

சங்கரன் என்னும் சிவனுக்கும் ஆறு தலைகள்;

சுப்பிரமணியக் கடவுளான சண்முகத்துக்கும் ஆறுதலைகள்;

ஐங்கரன் என்னும் விநாயகருக்கு ஆறு தலைகள்;

சங்கைக் கையில் பிடித்திருக்கும் விஷ்ணுவுக்கு தலையிலே பாற்கடல் இருக்கிறது;

சிவனுடைய திருவடியைத் துதிப்பவர்களுக்கு மனவருத்தம் தணிப்பதற்கு அதாவது ஆறுதலை தர முடியும் என்று நீ கண்டுகொள்வாயாக!

"சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானவே -- சங்கைப்
பிடித்தோற்கு மாறுதலை பித்தனார் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார்."
(காளமேகப் புலவரின் பாடல்)

No comments:

Post a Comment