திருச்சிராப்பள்ளி:
காவிரியின் கரையில் உள்ள ஒரு சிவஸ்தலம்.
இதற்கு ஒரு கதை உண்டு;
தனகுப்தன் என்பவனின் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். பிரசவ வலி வந்து விட்டது. காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. கர்ப்பிணியின் தாய் இவளுக்கு பிரசவம் பார்க்க அவள் ஊரிலிருந்து மகளின் ஊருக்கு வருகிறாள். நடுவில் காவிரி ஆறு கரைபுரண்டு ஒடுகிறது. அக்கரையில் நின்றுகொண்டு தவிக்கிறாள். தாயால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. மகளுக்கு பிரசவம் நெருங்கிவிட்டது.
சிவபெருமான், அந்த தாயின் உருவம் போல உருமாறி, அக்கரைக்குச் சென்று அந்த பெண்ணுக்கு அவளின் தாய்போலவே இருந்து பிரசவத்தில் உதவி வேலை பார்க்கிறார் சிவன்.
அதனால்தான், அந்தச் சிவனுக்கு பெயர் "தாயுமானவன்".
No comments:
Post a Comment