திருக்குடமூக்கு
இதுவே கும்பகோணம். ஒரு சிவஸ்தலம். இங்கே ஒரு தீர்த்தம் உள்ளது. அதன் பெயர் "மாமக தீர்த்தம்".
ஒரு முனிவர், தன் தாயின் அஸ்தியை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தமாக நீராடி வருகிறார். அப்படி வரும்போது, இந்த மாமக தீர்த்தத்தில் வந்து, தன் தாயின் அஸ்தியை கரையில் வைத்துவிட்டு, தீர்த்தத்தில் நீராடுகிறார். முடித்து வந்து, அஸ்தியைப் பார்க்கிறார். அந்த எலும்பு சாம்பல், உருமாறி தாமரை மலர்களாக இருக்கிறது.
இங்குள்ள சிவனின் பெயர் "கும்பேஸ்வரர்". அம்மையின் பெயர் "மங்களநாயகி".
No comments:
Post a Comment